| கனடா கந்தசுவாமி கோவில் வருடாந்த இரதோற்சவம் இன்று ஞாயிறு (August 08, 2010) காலை நடைபெறவுள்ளது. அதிகாலை 5.30 மணிக்கு ஆரம்பமாகும் உசக்கால பூசை, அபிஷேகம், காலைச்சந்திப் பூசை, தம்ப பூசை, வசந்தமண்டபப் பூசையையடுத்து முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சகிதம் காலை 9:30 மணிக்கு தேரில் ஆரோகணம் செய்வார்.காலை 11 மணியளவில் இரதம் இருப்பிடத்தை வந்தடையும்.
மாலை பச்சைசாத்தி யதாஸ்தானம் திரும்புதல், சன்முகர்ச்சனை, பிராயச்சித்தாபிசேகம், தேரடித்திருவிழா என்பனவும் நடைபெறும்.
அடியார்கள் அனைவரும் கலந்து கந்தனின் அருள் பெறுவீர்.
காலை 5:30 - உசக்கால பூசை 6:00 - அபிஷேகம் 7:00 - காலைச்சந்திப் பூசை 7:30 - தம்ப பூசை 8:30 - வசந்தமண்டபப் பூசை
மாலை 2:30 - பச்சைசாத்தி யதாஸ்தானம் திரும்புதல் 3:30 - சன்முகர்ச்சனை 4:30 - பிராயச்சித்தாபிசேகம் 8:30 - தேரடித்திருவிழா |